2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொருந்தாத ஆலோசனைகளால் பயனேதுமில்லை

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறரது விமர்சனத்துக்குப் பயந்து, தங்களது இயல்பான எளியவாழ்வு முறைமையில் இருந்து, நழுவி ஆடம்பர வாழ்க்கையினுள் நுழையும் குடும்பங்கள் ஏராளம்! ஏராளம்!!

கிராமத்திலிருந்து நகரத்தில் வாழத் தலைப்படும்​போது, எக்காரணம் கொண்டும், தங்கள் சீரிய வாழ்க்கையினை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.

பொருந்தாத ஆலோசனைகளால் பயனேதுமில்லை. மனம் விரும்பாமல், பிறர்போல் நடிக்க முற்பட்டால், புதுப்பிரச்சினைகள்தான் எழுந்துவிடும்.

ஜீரணிக்க முடியாத உணவினை, இந்த உடல் ஏற்றுக் கொள்வதுமில்லை. அவரவர்களுக்கு ஏற்றபடியே உணவுகளும் அமையும்.

கலாசாரப் பண்புகள் எங்கள் பரம்பரையுடன் இயைபுபட்டது. உள்மனம் ஆணித்தரமானதும் மென்மையானதுமாகும். எனவே, எமக்கு உகந்தபடி, பிறர் வியக்கும் வண்ணம், இயல்புடன் வாழ்வோமாக.

வாழ்வியல் தரிசனம் 24/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .