2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மமதை கொள்ளல் வீண் பெருமை

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகாரத்தைப் பிரயோகிப்பது என்னும் விடயத்தில் உயர்பதவி வகிப்பவர்கள் மட்டுமல்ல, எல்லாத் தரத்தினர்களுமே தத்தமது தொழில்கள் விடயத்தில், மற்றவர்களிடம் தங்களது தொழிலுக்கு ஏற்ப, அதிகார தோரணையிலேயே நடந்துகொள்கின்றார்கள்.

நீங்கள் ஓர் அலுவலகத்துக்குச் செல்கின்றீர்கள். அங்கே உங்களுடன் பேசவரும் சிற்றூழியர் முதல் பெரும்பாலானவர்கள் தமது அதிகார நிலையைக் காட்டவே விழைவார்கள். இதுகூட மானுட இயல்புதான். கோபப்பட்டால் எமது காரியம் முடியாது. 

மனிதர்களுக்கு ஆதிக்க உணர்வு வருவதற்கு தாழ்வுமனப்பாண்மையும் ஒரு காரணம்தான்.

ஆனால், அறிவுமுதிர்ச்சி, அனுபவமுடையவர்களில் சிலரே மட்டுமே, இந்த நிலை அநாவசியம், நிலையில்லாதது என்று உணர்வார்கள். அன்பானவர்கள் கடமையைப் புன்முறுவலுடன் செய்வார்கள். மமதை கொள்ளல் வீண் பெருமை.

வாழ்வியல் தரிசனம் 04/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .