Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருவர் உங்களைத் திட்டினால் அல்லது நியாயமற்ற முறையில் தவறாகப் பேசினால் எதிர்வாதம் புரிவதில் அர்த்தமே இல்லை. உங்களது மௌனமே அதற்கான பதிலாக இருக்கட்டும்.
இதனால், அவரது குற்றச் சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமில்லை. பேச வேண்டிய இடம், காலம், ஒருவரது மனநிலை உணர்ந்துதான், உங்கள் பக்கத்து நியாயங்களைப் பேசமுடியும்.
கோபத்தின் உச்சியில் உள்ளவர்கள் நியாயங்களை மறந்தவர்களாவர். தன்னைவிட நியாயம் தெரிந்தவர்கள் என ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இத்தகையோர் இருப்பதில்லை.
உண்மையிலேயே, நாங்கள் தவறுகளைப் பிறருக்கு எம்மையறியாமல் இழைத்திருந்தால், எவ்வித தயக்கமும் இன்றித் தாழ்மையுடன் மன்னிப்பைக் கேட்டேயாக வேண்டும்.
கடமைகளை அர்ப்பணிப்புடன் எமக்காக மட்டுமின்றி, எவருக்கும் செய்தால், அடுத்தவர் விமர்சனங்களைச் செவிமடுக்கத் தேவையில்லை. எங்களால் எவரும் விசனப்படவும் கூடாது.
வாழ்வியல் தரிசனம் 23/12/2016
பருத்தியூர் பால – வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
58 minute ago