Princiya Dixci / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதலன் எவ்வளவுதான் தன் காதலியுடன் அன்பு பாராட்டிப் புகழ்ந்தாலும் கூட, அவள் மனதில் மருட்சியும் பயமும் இழைந்தோடுவது இயற்கை.
“ஆரம்பத்திலிருந்து இன்றுவரை இவன் என்னுடன் கேலியும் கிண்டலுமாய் சிலசமயங்களில் குறும்போடு கூடிய பொய்யுரையும் பகர்கின்றானே; எங்கே சில சமயம் என்னை மறந்து ஏகி விடுவானோ என அச்சமும் அடைகின்றேனே; இது எப்படி என் மனசை வதைக்கின்றதே என நெஞ்சம் கிலேசமடைகின்றது”
மிக ஆழமான காதல் உருவாகினால் கூட, பெண்மைக்குரிய மென்மையினால் சிறிது அச்சம் ஏற்படினும், கூடவே இவன் என்னவன், என் துன்பம் இவன் அறிவான்; எனைப் பிரியான் என்று மனம் சிலிர்த்துத் தனது எண்ணத்தையிட்டு மனம் வருந்துவாள். காதல் வாழ்வில் இன்பமே என்றாலும், இதுபடுத்தும்பாடு, அனுபவித்தால்த்தான் புரியும்.
வாழ்வியல் தரிசனம் 20/12/2016
பருத்தியூர் பால – வயிரவநாதன்
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026