Kogilavani / 2017 மார்ச் 29 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது கையடக்க தொலைபேசியை குரங்கொன்று களவாடிச் சென்றுவிட்டதாக வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் குரங்குக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ள சம்பவமொன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த 26 வயதடைய பெண்ணே, இவ்வாறு குரங்குக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பிரித்தானிய நாட்டுப் பெண், இலங்கையில் தாதியர் கற்கை நெறியை கற்பதற்காக அநுராதபுர போதனா வைத்தியசாலையில் தாதியராக பயிற்சி நெறியில் ஈடுபட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த பெண் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்த குரங்கொன்று, மேசையில் வைக்கப்பட்டிருந்த அவரது 5.000 பெறுமதியான கையடக்க தொலைபேசியை எடுத்துக்கொண்டு சென்றுள்ளது.
இதையடுத்து, இது குறித்து பொலிஸ் நிலையத்தில் குரங்குக்கு எதிராக முறைப்பாடை பதிவுசெய்த குறித்தப் பெண், தனது கைடயக்கத் தொலைபேசியை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும், குரங்கினால் எடுத்துச்செல்லப்பட்ட கையடக்கத்தொலைபேசி இதுவரை கண்டெடுக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago