Ilango Bharathy / 2021 ஜூலை 02 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேசத்தின் சகரான்பூரிலுள்ள கம்பெனித் தோட்டம் எனும் இடத்தில் அதிசய மாமரமொன்று உள்ளது.
முகலாய மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இத்தோட்டத்தில் விவசாயக் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத் தோட்டத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன் 121 வகையான மாமரக்கன்றுகளை ஒன்றாக இணைத்து உத்தரபிரதேச விவசாயக் கல்வி பயிற்சி நிலைய இணை இயக்குனர் ராஜேஷ் பிரசாத் என்பவர் நட்டார்.
இம்மரத்தை பராமரித்துக் காப்பதற்காகத் தனியாக ஒரு பணியாளரும் அமர்த்தப்பட்டிருந்தார். இம்மரத்தில் தற்போது 121 வகையான மாம்பழங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மா மரத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் அம்மரத்தைப் பார்வையிடப் பலரும் அங்கு குவிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
58 minute ago
2 hours ago