Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலைபேசிகளில் குறுந்தகவல்களின் ஊடாக பெண்களே அதிகம் பொய் கூறுவதாக ஆய்வுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொய் கூறும்போது, அதிகூடிய வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதாகவும், அதுவே பொய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவ்யோர்க்கில் உள்ள கோர்னல் பல்கலைக்கழகத்தினால் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதாவது, நேரில் ஒருவர் பொய் கூறும்போது அவர்களின் கண்களையும் அசைவுகளையும் பார்த்து, பெரும்பாலும் கண்டறியக் கூடியதாக இருக்கும். ஆயினும் அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பும்போது, அவர் பொய் சொல்கிறாரா இல்லையா என்பதைக் கண்டறிவது கடினமானதாகும். ஆதலால், இதனைக் கண்டறிவது குறித்து பல்பலைக்கழகம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, ஆண்கள், பெண்களுக்கு நேரெதிராக செயற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. அவர்கள் மிகச் சொற்பமான சொற்களையே பொய்கூறுவதற்காக குறுஞ்செய்திகளில் உபயோகிக்கின்றனர்.
இந்த ஆய்வுகளுக்கென ஆயிரத்து 703 பேரின் குறுஞ்செய்திகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
40 minute ago
48 minute ago
1 hours ago