Ilango Bharathy / 2023 பெப்ரவரி 19 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைம்பெண்ணொருவருக்கு செருப்பு மாலை அணிவித்து, கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.
சிக்னல் தாண்டா கிராமத்தை சேர்ந்த குறித்த பெண், 6 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரை இழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள சிலருடன் தவறான தொடர்பில் இருந்து வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து அறித்த அவரது கணவரின் சகோதரரான ராஜூவும், அவரை தனது ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தி வந்துள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜூவை ஆற்றங்கரைக்கு வரவழைத்து தனது ஆண் நண்பர்கள் இருவருடன் இணைந்து ராஜூவை அடித்துக் கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ராஜூவை அவர் கொலைசெய்ததாக ஒப்புக்கொண்டதால், ஊர் மக்கள் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 minute ago
28 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago
1 hours ago
2 hours ago