Freelancer / 2026 ஏப்ரல் 11 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஆவார்.
தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் நேற்று (09) இரவு இந்த விருந்தினை நடத்தியிருந்ததுடன், அங்க ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியிருந்தது.
இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago