R.Tharaniya / 2025 மே 13 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கள்ள மண் கடத்தல் தொடர்ந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, செம்பியன் பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகள் நடுவில் மண் கொள்ளை இடம்பெற்று வருகின்றது. முன்னர் மணல் திட்டாக இருக்கும் பகுதிகளில் இருந்து மணல் எடுத்து செல்லப்பட்டது.
தற்போது கிராமப் பகுதியில் அதிகமாக கட்டிடங்கள் அமைப்பதால் மணல் அனுமதி கொடுக்கப்படாத நிலையில் மக்கள் குடியிருப்புகள் நடுவில் கள்ள மண் கடத்தல் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு கள்ள மண் அகழ்வு தொடர்ந்தால் இக் கிராமப்பகுதியில் பாரிய நீர்த்தேக்கம் ஏற்பட்டு மழைக்காலத்தில் உயிர் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்.
பு.கஜிந்தன்



17 minute ago
5 hours ago
7 hours ago
11 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
5 hours ago
7 hours ago
11 Mar 2026