Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூலை 25 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இது ஒரு பழைய உண்மைக் கதை!
தனது நண்பனிடம் ஆவேசமாக வந்தவர், 'எனக்கு உனது துப்பாக்கியைத் தந்துவிடுƒ நான் அந்தத் துரோகியைச் சுட்டுவிடப் போகின்றேன்' என்றார். நண்பருக்கோ ஒன்றுமே புரியவில்லை. வந்த நண்பரோ பெரும் பணக்காரர். இவருக்கு என்ன நேர்ந்து விட்டது என்று எண்ணியவர் கோபத்திற்கான காரணத்தைக் கேட்டார்.
'அவனுக்கு என்ன துணிவு இருந்தால் எனது வீட்டிற்கே வந்து எனது மனைவியின் படுக்கை அறைக்கே வந்துவிட்டான். இருவரையும் ஒன்றாக நானே பார்த்து விட்டேன்' என்றார். கேட்டவர் உள்ளுர அவரது செய்கையை எண்ணிப் பரிதாபமும் நகைப்பும் கொண்டு அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். சம்பவம் நடந்து ஓரிரு தினங்களில் பின் கோபித்துப் பின் சமாதானமாக அனுப்பி வைக்கப்பட்டவர் தனது மனைவியுடன் குதூகலமாக நண்பரின் வீட்டிற்கு வந்தார்.
'நாங்கள் சமாதானமாகி விட்டோம். ஆனால் வீட்டிற்கு வந்த துரோகியை மட்டும் விடமாட்டேன்' என்றார்.
ஒழுக்கம் கெட்ட குடும்பத்தில் எல்லாமே நடக்கும்‚ அதுசரி‚ இதில் யார் யாருக்குத் துரோகம் செய்தார்கள்? அப்பாவிக் கணவன் நிலை என்ன?
வாழ்வியல் தரிசனம் 25/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
15 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago