Princiya Dixci / 2021 ஜூலை 21 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் முறையான விசாரணையை வலியுறுத்தியும் சம்பவத்துக்குக்குக் கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பில் இன்று (21) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் என்னும் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பெண்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
சிறுமியின் மரணத்துக்கு எதிரான கோஷங்களைக் கொண்ட பல்வேறு பதாகைகளையும் ஏந்தியவாறு, மட்டக்களப்பு, தாண்டவன்வெளி சந்தியில் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“வீட்டு வேலைத் தொழிலாளர் உரிமைகளுக்கு சட்டம் வேண்டும்”, “சிறுமிக்கு நீதி வேண்டும்”, “வீட்டு வேலையும் தொழில்தான்; சட்டம் வேண்டும்”, “நான் வேலைக்காரி இல்லை, தொழிலாளி” போன்ற சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
41 minute ago
1 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
4 hours ago
8 hours ago