Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், இன்று (21) காலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில், சீமெந்து பதுக்கல் உட்பட பொருள்களை அதிக விலைக்கு விற்றமை, காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் நகர பகுதி மக்களால் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மன்னார் அலுவலகத் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், , மன்னார் நகர பகுதிகளில் குறிப்பாக சாந்திபுரம், தாராபுரம், தலைமன்னார் பிரதான வீதி பகுதிகளில்,இந்த சுநற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, பெரியகமம் பகுதியில் உரிய அனுமதி பத்திரமின்றி சீமெந்து மூடைகளை பதுக்கி வைக்கப்பட்ட களஞ்சியசாலைக்கும் பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபையினர் சீல் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
15 Sep 2025
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
15 Sep 2025
15 Sep 2025
15 Sep 2025