2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இத்தாலியில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ரூ.15 இலட்சம் மோசடி செய்தவர் கைது

Menaka Mookandi   / 2012 மே 18 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

இத்தாலி நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று ஏமாற்றிய சந்தேகநபர் ஒருவரை யாழ். விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

யாழ்.சுன்னாகப்பகுதியைச் சேந்த குறித்த நபர் தலைமறைவாயிருந்த நிலையில் சுன்னாக சந்தையில் வைத்து கைது செய்யப்பட்டு இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த சந்தேக நபரை 10,000 காசுப் பிணையிலும் 100,000 இரண்டு ஆட்பிணையலும் விடுதலை செய்ததுடன் பிரதி வெள்ளிக்கிழமைககளில் யாழ்.நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் ஒப்பமிடுமாறு உத்தரவிட்டதுடன் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X