2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய 14பேர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 17 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரவபத்தானை, வாஹல்கட பிரதேசத்தில் புதையல் தோண்டிய 14பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவப்பத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X