2025 ஜூலை 21, திங்கட்கிழமை

யாழில். சிறுகுற்றம் புரிந்த 109 பேர் கைது: எஸ்.எஸ்.பி

Kogilavani   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் சிறுகுற்றங்கள் புரிந்த 109 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி இன்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 18 பேர், குடிபோதையில் கலகம் விளைவித்த 7பேர், மதுபோதையில் வாகனம் செலுத்திய 5 பேர், விரோத சாராயம் வைத்திருந்த 5 பேர், திருட்டு குற்றச்சாட்டில் ஒருவர், சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 26 பேர் உட்பட 109 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .