2025 ஜூலை 19, சனிக்கிழமை

கொலை; 5 வருடங்களாக தேடப்பட்டுவந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஆட்கொலை சம்பந்தமாக 5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரியாழ் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சந்தேக நபரை நேற்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

ஆட்கொலை  சம்பந்தமாக 5 வருடங்களாக தேடப்பட்டு வந்த இந்தச் சந்தேக நபரை  நேற்ற புதன்கிழமை பொலிஸார் கைதுசெய்தனர்.

2007ஆம் ஆண்டு மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் ஒருவரை கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X