2025 ஜூலை 21, திங்கட்கிழமை

காரைநகரில் வீடொன்றில் கொள்ளை; 6 சந்தேக நபர்கள் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 17 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். காரைநகர் களபூமி பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

காரைநகர் களபூமி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து  நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8 பவுண் தங்கநகைகளும் 45,000 ரூபா பணமும் ஒருதொகை மீள்நிரப்பு அட்டைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேரை ஊர்காவற்றுறை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மேலும் இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 2 பேரை கொழும்புத்துறை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.வி.எல்.விக்கிரமராய்ச்சி தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட இவ்விருவரும்  அனலைதீவைச்  சேர்ந்தவர்கள். இவ்விருவரிடமிருந்தும்  மோட்டார் சைக்கிள் 1,  ஒன்டரை பவுண் தங்கச்சங்கிலி, 2 சோடி காப்புகள், 41,000 ரூபா பணம், மீள்நிரப்பு அட்டைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .