2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

யாழில் ஹெரோயின், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 03 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் 7 பேர் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் 6 பேர்  விசேட அதிரடிப்படையினரால்  கைதுசெய்யப்பட்டு  யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, யாழ். குருநகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகரில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

அத்துடன், கைதான 6 சந்தேக நபர்களிடமிருந்து 800 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்.

சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் யாழ். பொலிஸார் குறிப்பிட்டனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் இச்சந்தேக நபர் ஏற்கெனவே கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையானவர். அவரிடம் விற்பனைக்காக கஞ்சாவை வேறு சிலர் கொடுத்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X