2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

சீதுவையில் இளைஞரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 மே 10 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா )

சீதுவை, தம்பதுரைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் இளைஞரொருவரின் சடலம் நேற்று புதன்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சுங்கீத் சனத் புஷ்பகுமார (வயது 29) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவ் இளைஞரின் வீட்டு அறையிலிருந்தே சடலம் மீட்கப்பட்டதாகவும்   இவர்  கூரிய ஆயுதத்தினால்  வெட்டியும் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சீதுவைப் பொலிஸார் கூறினர்.  கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் இவரது முகத்தில்  5 காயங்கள்  இருப்பது விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இதேவேளை,  நீர்கொழும்பு மேலதிக நீதவான் ராஜிந்ரா ஜயசூரிய சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதுடன், பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு பணித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X