2025 ஜூலை 23, புதன்கிழமை

கள்ளக் காதலியுடன் தகராறு; தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர்

Menaka Mookandi   / 2012 மே 16 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலடைந்த வீட்டுத் தோட்ட மரமொன்றில் கழுத்தில் சுருக்கிட்டு குடும்பஸ்தல் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.கே.தேவராஜ் விஜேகுமார் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.

இன்று புதன்கிழமை காலை 7.40 மணியளவில் இவரது சடலம் குறித்த தோட்ட மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் வத்தளை பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .