2025 ஜூலை 23, புதன்கிழமை

இனம் தெரியாத நபர்களின் வாள்வெட்டில் குடும்பஸ்தர் படுகாயம்

A.P.Mathan   / 2012 மே 16 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

இனம் தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகிய நபர் ஒருவர் இன்று புதன்கிழமை மாலை யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவமானது இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் ஆவரங்கால் மேற்குப்பகுதியில் நடைபெற்றுள்ளது. இனம் தெரியாத நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து தலை, கால், நெஞ்சு மற்றும் கைகள் இரட்டையும் வாளினால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள் வெட்டில் படுகாயமடைந்த நிலையில் அன்புலன்ஸ் வண்டி மூலமாக குறித்த நபரை உறவினர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவந்துள்ளனர்.

வேலாயுதம் ரஜனிகாந்தன் (வயது 31) என்ற ஒரு பெண் பிள்ளையின் தந்தையே இனம் தெரியாத நபர்களின் வாள் வெட்டில் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .