2025 ஜூலை 23, புதன்கிழமை

திருநெல்வேலி சந்தையில் முதியவரின் தங்கச்சங்கிலி அறுப்பு

Suganthini Ratnam   / 2012 மே 22 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தைப்பகுதியில் முதியவர் ஒருவரது தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அறுத்துக்கொண்டு சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என யாழ். பொலிஸார் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலிச் சந்தையில் மரக்கறி வாங்குவதற்காகச் சென்ற  இம்முதியவரை பின்தொடர்ந்த இனந்தெரியாத நபர்கள், 2 பவுன் சங்கிலியை அறுத்துக்கொண்டு சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும்  யாழ். பொலிஸார் கூறினர். 

இது தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .