2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்குள் ஹெரோயின் கடத்தி வந்த இரு ஈரானியர்கள் கட்டுநாயக்காவில் கைது

Menaka Mookandi   / 2012 மே 30 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்த ஈரான் நாட்டுப் பிரஜைகள் இருவரை பொலிஸ் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த டுபாய் நாட்டு விமானமொன்றில் வந்த ஈரான் பிரஜைகளே இவ்வாறு போதைப்பொருட்களைக் கடத்தி வந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கூறிய பொலிஸ் பேச்சாளர், கைது செய்யப்பட்டவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .