2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

யாழ்.மருத்துவ சங்க உறுப்பினரின் வீட்டிற்கு முகமூடி அணிந்தவர்களினால் தாக்குதல்

Kogilavani   / 2012 ஜூன் 14 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல், எஸ்.கே.பிரசாத்)
யாழ்.மருத்துவ சங்க உறுப்பினரும் புற்றுநோய் பிரிவு வைத்திய அதிகாரியுமான என்.ஜெயக்குமாரின் கந்தர் மடத்தில் அமைந்துள்ள வீடு இன்று வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக யாழ். மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் நிமலன் யாழ்.பொலிஸில் முறையிட்டுள்ளார்.

முகமூடி அணிந்த சில நபர்கள் குறித்த வீட்டினுள் நுழைந்து வீட்டின் யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவையும் உடைத்து எறிந்ததுடன் கழிவு எண்ணெயினை வீடு முழுவதும் ஊற்றிச் சென்றுள்ளதாக யாழ்.பொலிஸில் நிலையித்தில்; முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் இன்று வியாழக்கிழமை பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்.மருத்துவ சங்கத் தலைவர் வைத்தியர் நிமலன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X