2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் குத்திக் கொலை

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 07 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது ஆண் நண்பர் விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள மேம்பாலத்தடியில்  இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புறக்கோட்டை பொலிஸாரின் விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவார். 

இப்பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தரான இவரது ஆண் நண்பர், இச்சம்பவத்தின் பின்னர் விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபர் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆவார்.  (படப்பிடிப்பு - நிசல் பதுகே)




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X