2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 22 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

ஆண்டிகம, நாகவில பிரதேசத்தில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி மற்றும் அத்துப்பாக்கி சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர சேவைக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்டபோதே உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி மற்றும் அத்துப்பாக்கி சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் காட்டுக்குச் சென்று விலங்குகளை  வேட்டையாடுபவர் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் பள்ளம பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .