2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சாராய போத்தல்களை கடத்த முயன்றவர் கைது

A.P.Mathan   / 2013 மார்ச் 23 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கல்பிட்டி, பத்தலங்குண்டு தீவுக்கு சாராய போத்தல்களினை கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு தயாராகவிருந்தார் என கூறப்படுமொருவர் கல்பிட்டி பொலிஸாரினால் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பத்தலங்குண்டு தீவினை சேர்ந்தவராவார். குறித்த நபர் கல்பிட்டி துறைமுகப் பகுதியில் 51 சாராய போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சாராய போத்தல்களுடன் பத்தலன்குண்டு தீவுக்கு செல்ல தயாராகவிருந்தபோது பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து கைதுசெய்யப்பட்டார்.

கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .