2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இராணுவச் சீருடையை அணிந்தவாறு கொள்ளையிட்டவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 07 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

இராணுவச் சீருடையில் 12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் பொருட்களையும் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

19 வயதான இளைஞர் ஒருவரையே கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் இராணுவச் சீருடையை அணிந்துகொண்டு சென்றே இவ்வாறான மோசடிகளைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொள்ளையிட்ட பொருட்களின் ஒரு தொகுதியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X