2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தில்லையடி பிரதேசத்தில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை

Suganthini Ratnam   / 2013 மே 23 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

புத்தளம், தில்லையடி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அவ்வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த வீட்டிலிருந்த தங்கநகைகளும் மடிக்கணினியும் நேற்று புதன்கிழமை கொள்ளையிடப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வீட்டிலுள்ளவர்கள்  வெளியே சென்றிருந்த வேளையிலேயே பூட்டப்பட்டிருந்த வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X