2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளை வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 23 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்,எம்.என்.எம்.ஹிஜாஸ்

சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும்  ஒருவரை புத்தளம், நவகத்தேகம பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும், இவரிடமிருந்து 14 சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சந்தேக நபர்; சட்டவிரோத உள்ளூர்; தயாரிப்பு  துப்பாக்கிகளை பயன்படுத்தி  காடுகளில் மிருகங்களை தொடர்ச்சியாக வேட்டையாடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்தச் சந்தேக நபரை துப்பாக்கிகளுடன் கைதுசெய்ததாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகம, குருக்கெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். (படங்கள்: எம்.என்.எம்.ஹிஜாஸ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X