2025 ஜூலை 21, திங்கட்கிழமை

குழியிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மே 26 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேத்தாபிள்ளை, முதலியார் சேனை பகுதியில் உள்ள நீர் நிரம்பிய குழியிலிருந்து குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஒரு வயதும் 8 மாதமுடைய பெண் குழந்தை ஒன்றின் சடலமே நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X