2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வவுனியாவில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வவுனியாவில் அமைந்துள்ள மாகாண பயிற்சி நிலையத்திலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பயிற்சி நிலையத்தின் முகாமையாளரான மானிப்பாயை சேர்ந்த எஸ்.புருசோத்தமன் (வயது 48) என்பவரின் சடலமே  மீட்கப்பட்டுள்ளது.

இவரது படுக்கை அறையிலிருந்தே இந்த சடலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X