2025 ஜூலை 19, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை கைதுசெய்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சந்தேக நபர்  230 கிராம் கஞ்சாவுடன்  நேற்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் தொடர்ச்சியாக கலாஓயா பிரதேசத்திலிருந்து கஞ்சாவைக் கொண்டு வந்து சாலியவெவ பகுதியில் விற்பனை செய்து வந்தமை தொடர்பில் விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X