2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கள்ளு விற்பனை செய்தவருக்கு அபராதம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 05 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்தல்லா

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட அளிக்கம்பை பிரதேசத்தில் கள்ளு விற்பனை செய்த நபரொருவருக்கு தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கள்ளு விற்பனை செய்த குற்றச்சாட்டில் மேற்படி நபர் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டு அக்கரைப்பற்று  நீதிவான் நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த நபருக்கெதிராக கள்ளு விற்பனை செய்தமை மற்றும் கள்ளு வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சாட்டப்பட்டுள்ளன.

இதற்கமைவாக ரூபா 7,000 தண்டப்பணம் விதித்து  நீதவான் தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X