2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு,  ஊறணி பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சின்ன ஊறணியிலுள்ள செழியன் வீதியைச் சேர்ந்த 2  பிள்ளைகளின் தந்தையான சுந்தரநாதன் சந்திரகுமார் (வயது 55) என்பவரே சடலமென்று  அடையாளம் காணப்பட்டுள்ளதாக  பொலிஸார் கூறினர்.

போதைப்பழக்கத்துக்கு அடிமையான இவர், மட்டக்களப்பு மாவட்ட சமுதாய சீர்திருத்த  திணைக்களத்தில் சீர்திருத்தப்பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதுடன்,   குறித்த திணைக்களத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் இவர் தப்பியோடி வந்ததாகவும்  என தெரியவருகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்; பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .