2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் இளைஞனின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 20 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

மட்டக்களப்பு, பாலமீன் மடு பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம், இன்று வெள்ளிக்கிழமை (20) காலை மீட்கப்பட்டுள்ளது.
 
பாலமீன் மடு பகுதியிலுள்ள முருகன் கோவிலுக்கு அருகாமையில் இந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த சடலம், மட்டக்களப்பு எல்லை வீதியிலுள்ள கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சதீஸ்குமார் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .