Editorial / 2019 ஜூலை 26 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளியாபிட்டிய - கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்றில், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளியாபிட்டிய, அலெப்பதெனிய பிரதேசத்துக்கு, வான் ஒன்றில் வந்த சிலர், அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனல்.
சம்பவத்தில் காயமடைந்தவர், குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இவர், 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கதிர்காமம் - யால காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான மாணிக்கக்கல் அகழ்ந்தவர்களுக்கும் வனவளப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார்.
5 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 Nov 2025