2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி வீட்டிலிருந்த சங்கு திருட்டு!: நபர்களுக்கு கடூழிய சிறை

Editorial   / 2024 மார்ச் 01 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்குள் நுழைந்து, அபூர்வ சங்கு மற்றும் பெறுமதிமிக்க போத்தல் ஒன்றையும் திருடிச்சென்ற இருவருக்கு, இன்று முதலாம் திகதி தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்படி சங்கை திருடிய நபருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும், 1500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதோடு, போத்தலைத் திருடிய நபருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்குமுன்னர், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆர்பாட்டத்தின்போதே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X