Editorial / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த “பொப்மாலி” என்றழைக்கப்படும் களுத்துறை சந்தித தாப்ருவே என்பவர், கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.
எல்பிட்டியவில் வைத்தே, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று, பேருவளை கடலில் வைத்து 288 கிலோ 644 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சந்தேகத்தின் பேரில் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு பிரதான காரணகர்த்தவாக “பொப்மாலி” யே இருந்துள்ளார் என பொலிஸ் தலைமையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago