Freelancer / 2025 ஜனவரி 28 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
'புஷ்பா 2' படத்தின் சிறப்பு திரையிடலின் போது ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் அல்லு அர்ஜுனைக் காண கூட்டம் முந்தியடித்ததால், நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அவரது குழந்தை மூளைச்சாவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக தற்போது சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், தெலங்கானாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரவு 11 மணிக்கு பிறகும் பகல் 11 மணிக்கு முன்பும் திரையரங்குகளில் படம் பார்க்க அந்த மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகாலை மற்றும் நள்ளிரவில் சினிமா பார்க்க வெளியே செல்வது உடல்நலனை பாதிக்கும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது உண்மைதான் என நீதிபதி கூறினார். R
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026