2025 மே 14, புதன்கிழமை

புகைப்படப்பிடிப்பாளர்களை மிரட்டிய கத்ரீனா

George   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சினிமா பிரபலங்கள் பலர் புகைப்படப்பிடிப்பாளர்களை எச்சரிப்பதும், மிரட்டுவதும் பலமுறை நடந்துள்ளது. அண்மையில், நடிகை கத்ரீனா கைப் புகைப்படப்பிடிப்பாளர்களை எச்சரித்தும், மிரட்டியும் உள்ளார்.

தனது சர்வதேச நிகழ்ச்சிக்காக நடன அமைப்பாளர் கணேஷ் ஆச்சார்யாவின் ஸ்டூடியோவில் கத்ரீனா கைப் பயிற்சி செய்வதில் பிஸியாக இருந்து வருகிறார்.

பயிற்சியின் போது கத்ரீனாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டு, அவரை பரிசோதித்துள்ளனர்.

அப்போது அவர் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறி காரில் ஏறும் போது, புகைப்படப்பிடிப்பாளரகள்; சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த கத்ரீனா கோபமடைந்துள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் மீது புகார் அளிக்கப் போவதாக புகைப்படப்பிடிப்பாளர்களை எச்சரித்தும், மிரட்டியும் சென்றுள்ளார் கத்ரீனா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .