2025 மே 21, புதன்கிழமை

மாதவனை அழவைத்த கமல்...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 22 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

"மன்மதன் அம்பு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது அந்தப் படத்தில் வரும் 'நீல வானம்' என்று ஆரம்பமாகும் பாடலை கமல் மேடையேற்றினார்.

அதைக் கேட்டபோது நான் குழந்தைபோல் அழுதேன். ஆண்கள் அழக் கூடாது என்பார்கள். ஆனால் கமல் பாடல் என்னை அழ வைத்தது" என்று கூறியுள்ள நடிகர் மாதவன்,   கமல் தனக்கு கடவுள் போன்றவர் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அன்பே சிவம் என்ற படத்திலும் சேர்ந்து நடித்த மாதவன் - கமல் ஜோடி, பின்னர் கமலின் சொந்தப் படமான நளதமயந்தியிலும் நாயகனாக நடித்தார்.

இதில் கமல் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்தும் இவர்கள் மன்மதன் அம்பு படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையிலேயே, கமலை புகழ்ந்துத் தள்ளியுள்ளார் மாதவன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X