2025 மே 19, திங்கட்கிழமை

நிமிர்ந்து நில்

Menaka Mookandi   / 2014 மார்ச் 17 , மு.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர்               : ஜெயம் ரவி
நடிகை             : அமலாபால்
இயக்குனர்     : சணித்திரகனி
இசை                : ஜீ.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு    : சுகுமார்

நாசர் நடத்தும் ஆசிரமம் ஒன்றில் தங்கி படித்து வரும் ஜெயம் ரவி, படிப்பு முடிந்து தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். சட்டம், ஒழுங்கை மக்கள் மதிப்பதில்லை என்று மனசுக்குள் பொங்கி எழும் ஜெயம் ரவி ஒருநாள், சிக்னலில் டிராபிக் பொலிஸிடம் மாட்டிக் கொள்கிறார். எல்லா பேப்பர்களும் சரியாக இருந்தும் பைன் கட்டச் சொல்கிறார் டிராபிக் பொலிஸ். இல்லையென்றால் 100 ரூபாய் இலஞ்சமாக கேட்கிறார்.

ஆனால், இலஞ்சம் கொடுக்க ஜெயம் ரவி மறுக்கிறார். அதனால், நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதாகிறது. அங்கு நீதிமன்றத்தில் தன்னிடம் இலஞ்சம் கேட்ட எல்லோரையும் மாட்டிவிடுகிறார். இதனால், அந்த அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட அதிகாரிகள் ஜெயம் ரவியை அடித்து துவம்சம் செய்கிறார்கள்.

ஆனால், அசராத ஜெயம் ரவி ஊழல் அதிகாரிகளை மாட்டிவிட புது திட்டம் தீட்டுகிறார். அதாவது, இல்லாத ஒரு ஆளுக்காக அரசு அடையாள அட்டைகளையும், சான்றிதழ்களையும் நல்ல அதிகாரிகளின் துணையோடு பெறுகிறார். இதற்காக இலஞ்சம் கொடுத்ததை வீடியோவும் எடுத்துவிடுகிறார்.

இந்த வீடியோ ஆதாரத்தை கோபிநாத் உதவியுடன் டிவி சேனலில் ஒளிபரப்புகிறார். இதில், டாக்டர், நீதிபதி, பொலிஸ், எம்.பி. என 147பேர் சிக்குகிறார்கள். அனைவரையும் மக்கள் ணின்னாலும், சட்டத்தின் முன்னாலும் நிறுத்துகிறார் ஜெயம் ரவி. இதனால், கொதிப்படைந்த அதிகாரிகள் ஜெயம் ரவியை பழிவாங்க ணிடிவெடுக்கின்றனர். இறுதியில் ஜெயம் ரவியை அவர்கள் பழிவாங்கினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இலஞ்சத்துக்கு எதிராக தமிழில் வெளிவந்த இந்தியன், சாணிராய், சிட்டிசன், அந்நியன் ஆகிய திரைப்படங்களில் வரிசையில் நிமிர்ந்து நில் படமும் நிற்கிறது. ஜெயம் ரவி ரொம்பவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தில் இரண்டு வேடங்களில் வரும் இவர், இரண்டிலும் நல்ல வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். நரசிம்ம ரெட்டியின் பாடி லாங்குவேஜில் அசத்தியிருக்கிறார்.

அமலாபாலுக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே. ஹீரோவை காதலிக்கவும், டூயட் பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். இவர் இல்லாவிட்டாலும் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாதது போன்றே இருக்கிறது. கருப்புத் தங்கம் என்ற பட்டப்பெயரோடு அறிணிகமாகும் சூரி காமெடியில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.
சரத்குமார், கோபிநாத் ஆகியோர் திரைப்படத்தில் சிறிது நேரமே வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை, பிற்பாதியில் ஏனோ ஆமை வேகத்தில் நகர்கிறது.

தனி மனிதன் திருந்தினால் தான் நாடு திருந்தும் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சணித்திரகனி. இதில், கொலை, ரத்தம் எதுவும் காட்டாமல் இருந்தது கொஞ்சம் நிம்மதியை தருகிறது.

சணித்திரக்கனியின் முந்தைய படமான நாடோடி படத்தை ஒப்பிடும்போது, இது கொஞ்சம் சறுக்கல்தான். ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கிறார் சுகுமார் ஜீவன் ஆகியோரின் ஒளிப்பதிவு கஷக்கல். மொத்தத்தில் நிமிர்ந்து நில் துணிந்து செல்லும். (மாலைமலர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X