George / 2015 ஜூலை 08 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

'என்னை புரிந்து கொண்டவர் கிடைத்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன்'என நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
சோனியா அகர்வாலுக்கு தற்போது 33 வயது ஆகிறது. அவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ளும்படி நெருக்கமானவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து கூறும்போது இரண்டாவது திருமணத்துக்கு ஓ.கே. சொல்லியுள்ளார்.
''நான் தற்போது தனியாக தான் இருக்கிறேன். விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று மற்றவர்களோடு நட்புடன் பழகி தனிமையை போக்குகிறேன். எனக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளது. என்னை புரிந்து கொண்டவர் கிடைத்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன்'' என்று தடாலடியாக கூறியுள்ளார்.
காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் 2003ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான சோனியா அகர்வால் கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, திருட்டு பயலே, புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவனை 2006ஆம் ஆண்டு திடீரென திருமணம் செய்து கொண்டார். 2010ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.
அதன்பிறகு சோனியா அகர்வால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். விவேக் ஜோடியாக நடித்த 'பாலக்காட்டு மாதவன்' திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
12 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
16 minute ago