George / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூன்று மாறுபட்ட வேடங்களில் விஜய் நடித்து வரும் தெறி திரைப்படத்தின் இறுதிக்கட்ட கிளைமாகாக்ஸ் சண்டைக் காட்சிகள் எதிர்வரும் 10ஆம் திகதி படமாக்கவுள்ளதாம்.
திரைப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் அண்மையில் கோவாவில் படமாக்கப்பட்டது.
சமூக விரோதிகளை விஜய் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்களுக'காக ஹொலிவூட்டில் இருந்து சண்டைப் பயிற்சியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை விஜய் திரைப்படங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டுளளன.
ஒரு சண்டை காட்சியை மட்டும் ஒரு வாரத்துக்கும் மேலாக, கிட்டத்தட்ட 8-க்கும் மேற்பட்ட கமெராக்களை வைத்து படமாக்கியிருக்கிறார்களாம்.
இறுதி சண்டைக் காட்சியில், விஜய் மற்றும் வில்லனாக நடிக்கும் இயக்குநர் மகேந்திரன், அவரது அடியாட்களும் நடிக்கிறார்களாம். அந்த காட்சிக்காக சென்னையிலுள்ள பின்னி மில்லில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
விஜய் ஒரு அடி விட்டால் மூன்று சுற்று சுற்றி பறந்து சென்று விழக்கூடிய அளவுக்கு திறமையான சண்டை நடிகர்களாம். அவர்கள் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பே சென்னை வந்திருந்து ரிகர்சலை தொடங்குகிறார்களாம்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago