2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நடிகை ரம்யா வைத்தியசாலையில்

George   / 2017 மார்ச் 13 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகையும், அரசியவாதியுமான ரம்யா, உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் “குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி” போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா என்றழைக்கப்படும் திவ்யா ஸ்பந்தனா.

கன்னடத்திலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருப்பவர், அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்பி.யாகவும் பணியாற்றினார். தற்போது காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதியாகவும், சமூக சேவையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ரம்யாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட, பெங்களூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சாப்பிட்ட உணவு, நஞசாக மாறிவிட்டதால் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு திரும்புவார் என தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X