George / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து வரும் திரைப்படத்துக்கு கடந்த வாரம்தான் வேதாளம் என்று பெயர் வைத்தார்கள்.
இதை தெரிந்தே வைத்தார்களா, அல்லது தெரியாமல் வைத்தார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால், புலி திரைப்படத்தில் அராஜகம் புரியும் வேதாளம் இன மக்களுடன் விஜய் எதிர்த்து நின்று போராடுவதுதான் திரைப்படத்தின் ஒரு வரிக் கதை.
அந்த வேதாளம் இன மக்களின் ராணியாகத்தான் ஸ்ரீதேவி நடித்துள்ளார். புலி திரைப்படத்துக்கும் வேதாளம் என்பதற்கும் ஒரு தொடர்பு உள்ளது என்பது இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதிஹாசனுக்குக் கூடவா தெரியாது.
புலி திரைப்படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வேதாளம் என்று ஏதாவதொரு கதாபாத்திரம் உச்சரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
விஜய்க்கும், அஜீத்துக்கும் இடையே திரையுலகத்தில் கடும் போட்டி இருந்து வரும் நிலையில், விஜய் நடித்துள்ள புலி திரைப்படத்தில் வந்த வேதாளம்; என்ற முக்கிய கூட்டத்துக்கு வைக்கப்பட்ட பெயரை அஜீத் திரைப்படத்தின் பெயராக வைத்திருப்பது ஆச்சரியமாகவே உள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago