Freelancer / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகர் மோகன் லால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேரு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. இதனைத் தொடர்ந்து,வெளியான ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான லூசிபர் திரைப்படம இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது.
இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மோகன்லால் குஜராத்தில் இருந்து கொச்சிக்குத் திரும்பினார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடுமையான காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஐந்து நாட்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.S
46 minute ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
7 hours ago
16 Jan 2026