Freelancer / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் ரமணி அம்மா. 2017 ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப சீனியர்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பெரும் பிரபலமானார் ரமணி அம்மா. சரிகமப சீனியஸ் நிகழ்ச்சியில் "ராக்ஸ்டார்" பட்டத்தை கொடுத்தனர் நடுவர்கள்.
காதல் படத்தில் தண்டட்டி கருப்பாயி… தாழையுத்து மருதாயி… என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார் ரமணி அம்மா.
ரமணி அம்மாவின் கணீர் குரலுக்கு பெரும்ரசிகர் பட்டாளம் உண்டு. வயதான போதும் தனது விடாமுயற்சியால் சிறுவயது கனவை சாதித்த ரமணி அம்மா பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாடகி ரமணி அம்மா இன்று காலமானார். அவரது திடீர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் வெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றர்.
23 minute ago
35 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
53 minute ago